கொலைகாரன்பேட்டையில் பிறந்தவன் நீ!!
ஆட்டம் தொடங்கி விட்டது..
ஆட்டத்தின் நடுவில் நீ..
வழுக்குமர வாசலில் நீ..
பின்வாங்கி செல்ல அனுமதி இல்லை..
விதிமுறைகள் என்பது இங்கே இல்லை..
ஏளனம் செய்பவர்களுக்கு எல்லை இங்கில்லை..
ஆட்டத்தின் நடுவில் நீ..
வழுக்குமர வாசலில் நீ..
தோல்விகள் உன்னை துரத்தும்..
தறுதலைகள் எல்லாம் மிரட்டும்..
குறைகளை சொல்லியே வருத்தும்..
ஆட்டத்தின் நடுவில் நீ..
வழுக்குமர வாசலில் நீ..
பாம்பென்றால் பகல்வார்கள்...
சிங்கமென்றால் சிரிப்பார்கள்..
நாய் என்றாலும் நகல்வார்கள்..
நீ நீயாய் மாறு..
தோல்விகளை வலிகளாய் மாற்று..
வலிகளை வழிகளாய் மாற்று..
வழிகளை வாழ்க்கையாய் மாற்று..
உன் விதியை மாற்று... ஆட்ட விதியை மாற்று....
அது வரை இந்த உலகம்
உன்னை பார்த்து சிரிக்கும்
கொலைகாரன்பேட்டையாய்...!!!
நினைவுகொள் கொலைகாரன்பேட்டையில் பிறந்தவன் நீ!!
2 comments:
//தோல்விகள் உன்னை துரத்தும்..
தறுதலைகள் எல்லாம் மிரட்டும்..
குறைகளை சொல்லியே வருத்தும்..
இது முற்றிலும் உண்மை.
But கொலைகாரன்பேட்டை ல பொறந்தவங்கல கொஞ்சம் நக்கல் பண்ணற போல இருக்கு! :P
கவிதையில உண்மையும் சொல்லலாம்.
பொய்யும் சொல்லலாம்.
நான் சொல்ல வந்தத சரியா சொல்லிட்டேன்..
கவிதைய விமர்சித்ததுக்கு நன்றி,.. :)
Post a Comment