மூன்று நாட்களுக்கு முன்பே கவனம் இல்லை வேலையில்..
குழப்பம் என்ன வாங்குவது ஏது வாங்குவது..
பதட்டம் பயணசீட்டும் உறுதியாகவில்லை..
அவசரமாய் கிளம்பினேன் அனைவருக்கும் கை அசைத்து..!!!
எங்கு பார்த்தாலும் தீபாவளி வாழ்த்து செய்தி..
கை பேசி கூட களைத்து விட்டது என் வருகையை
அனைவருக்கும் சொல்லி...
கொட்டும் மழையில் என் கவனமெல்லாம் மணியில்..
ஒரு வழியாய் பிடித்து விட்டேன் ரயிலை..
என் பெயரை பார்த்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு...!!!
எதிர் இருக்கையில் குழந்தைகள் கேள்வி..
"அம்மா ரயில் எப்பம்மா ஊருக்குப் போகும் ...."
என் மனதிலும் அதே கேள்வி...சிரித்தேன் மனதுக்குள்..
நகர்ந்தது ரயில் வண்டி என் நினைவுகளோடு...!!!
விடிந்தது.. ஜன்னல் வழியே ஊரின் வாசம்..
எனக்கு பழகிய இடங்கள் அன்று புதுமையானது..
வழியெல்லாம் தீபாவளி கொண்டாட்டம்..
நடந்தேன் வீட்டை நோக்கி..!!!
வாசலில் நிற்பது அம்மா தான்..
கண்டு கொண்டேன் அவள் புடவை வாசம் கொண்டு..
வாயில் புன்னகையும் தட்டில் பலகாரமும் சுமந்து நின்றால்..
அருகில் சென்றதும் ஆ காட்டு என்றால்..!!!
ஆ..... காட்டினேன் ஆசையாய்...
என்னை திட்டும் ஓசை..
டேய் மச்சி... அப்போ டெலிவரி அனுப்பிட்டு நீ இன்னும் தீபாவளிக்கு
ஊருக்கு போகலையா...
முடியிரதுக்குள்ள போடா... அப்போ நான் கெளம்புறேன்...!!!
1 comment:
Deepavali pala varishangaluku mun
Deepavali ippa! :D
ExACtly~!
Post a Comment