Sunday, November 2, 2014

நீ...

நான் கண்ட கனவினில் அழகிய நிஜம் நீ..
என் நிஜத்தினில் கனவாய் இருப்பதேனோ.. !!

பூக்களுக்கு விலங்கு மாட்ட தேவையில்லை..
பூவே நீ என்னை பூட்டி வைப்பதேனோ..!!

மர நிழலில் சாய்ந்து நின்றபோதும்..
உன் நினைவில் என்னை சுட்டெரிப்பதேனோ..!!

எழுதி எழுதி பேனா மை தீர்ந்த பின்னும்...
நான் கிறுக்கினேன் கிறுக்கனாய்..!!